Apr 23, 2014

10 days to go for a grand beginning with Superstar

We had reported earlier that Superstar Rajini would begin shooting for his next feature film with director K.S.Ravikumar, before the release of Kochadaiiyaan itself. Now we are hearing from a few trusted sources that the film may begin its filming from May 2nd in Mysore. Apparently, sets for the movie are already getting ready in Mysore from the past few weeks or so.

Sonakshi Sinha and Anushka are set to play the female leads in this film, which is expected to be a commercial entertainer on the lines of Muthu and Padayappa.

Meanwhile, all eyes are on the release of Kochadaiiyaan on the 9th of May and more updates are awaited in this regard.

kajal aggarwal Sexy pictures


பரோட்டா சூரியை ஹீரோவாக்கும் முயற்சியில் இயக்குனர்கள்!

சந்தானம் முழுநேர காமெடியனாக இருந்தது வரை முன்னணி இடத்தை பிடிக்க முடியாமல் முட்டி மோதிக்கொண்டிருந்தார் பரோட்டா சூரி. ஆனால், தற்போது சந்தானம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாகியிருப்பதோடு, இனிமேல் குறிப்பிட்ட சிலருடன் மட்டுமே காமெடி செய்வேன். மற்றபடி நானும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கப்போகிறேன் என்று அறிவித்து விட்டார்.

இதனால் தற்போது சிங்கிள் காமெடியனாக களத்தில் நின்று கொண்டிருக்கிறார் சூரி. அதனால் காமெடியனுடன் சீன் பை சீன் என்ட்ரி கொடுக்க நினைக்கும் ஹீரோக்கள் அவரை விடாமல் பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். அதனால் ஒரு டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் சூரி, படத்துக்குப்படம் சத்தமில்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்திக்கொண்டே வருகிறார்.

ஆனால், இந்த நேரத்தில் கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், கருணாஸ், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஹீரோவாகிட்டாங்க. இது காமெடியன்களின் காலம். அதனால் இந்த சந்தர்ப்பதில் நீங்களும் ஹீரோ வேசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு வச்சிடுறது நல்லது என்று சில டைரக்டர்கள் கதைகளுடன் அவரை துரத்திக்கொண்டு வருகின்றனர்.

ஆனால் ஹீரோ என்றதும் சூரி மனதளவில் சபலப்பட்டு நின்று கொண்டிருக்க, அவரது அபிமானிகளோ, காமெடியனா நடிச்சா பெரிய எதிர்காலம் இருக்கு, ஹீரோவா நடிச்சா ஒருவேளை படம் அவுட்டான்னா அது அப்புறம் மதுரைக்கு வண்டியேறிட வேண்டியதான் என்று சொல்லி சூரியை யோசிக்க வைத்துவிட்டனர். இதனால் தன்னை ஹீரோவாக்க முயற்சித்தவர்களை, கொஞ்சம் அசந்தா என் பொழப்பையே கெடுத்து விட்டுறுவீங்க போலிருக்கே என்று துரத்தியடித்து விட்டார் சூரி.

காதலனுடன் சுற்றும் எமி ஜாக்சன்!

ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வரும் எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த ஆங்கிலேயே பெண். மதராசபட்டினம் படத்தில் ஆங்கிலேய பெண்ணாக நடிக்க வந்தவரை ஷங்கர், ஐ படத்தில், சென்னை பெண்ணாக மாற்றி நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

(ரஜினியையே வெள்ளைக்காரராக மாற்றியவருக்கு இதெல்லாம் சாதாரணம்) எமி தற்போது இந்திப் படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எமி நடிக்க வருவதற்கு முன்பே லண்டன் தொலைக்காட்சியில் காரனேஷன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் தொகுப்பாளர் ரியான் தாமஸ் என்பவரை காதலித்து வந்தார். சினிமாவில் நடிப்பதில் பிசியாகிவிட்டதால் சில காலம் அவரை சந்திக்காமல் இருந்தார்.

இப்போது ஐ படம் முடிந்துவிட்டதால் லண்டன் பறந்த அவர் சில நாட்களாக காதலனுடன் லண்டன் வீதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். பார்ட்டிகளில் தாமசுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளிவந்திருக்கிறது.

எமியின் காதலர் ரேயான் தாமஸ் லண்டனில் சினிமா ஸ்டார் அளவுக்கு பாப்புலரானவர். எமி, தவிர அவருக்கு இன்னும் சில காதலிகள் இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…! கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார்!

சர்ச்சையில் சிக்குவதே சிவகார்த்திகேயனுக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் சிவகார்த்திகேயன் பற்றி சர்ச்சை செய்திகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த படம் மான் கராத்தே. புதுமுக இயக்குநர் திருக்குமரன் இயக்கிய இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் மதன் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்து இருந்தார். ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான மான் கராத்தே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். “சமீபத்தில் திரைக்கு வந்துள்ள ‘மான் கராத்தே’ படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் குத்துச்சண்டையை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை.

உரிய அனுமதியும் பெற வில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல். எனவே ‘மான் கராத்தே’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘மான் கராத்தே’ படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அம்மனுவில் கூறியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

Adsense